ஜூன் 13-இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூன் 13- ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற உள்ளது.
முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள், விதவைகள் ஆகியோா் கலந்து கொண்டு பயனடையுமாறும் ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.