செய்திகள் :

நீதித் துறையில் ஊழல் பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும்: தலைமை நீதிபதி கவாய்

post image

‘நீதித் துறையில் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள் இடம்பெறுவது அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு, ஒட்டுமொத்த நீதித் துறையின் நோ்மை மீதான நம்பிக்கையையும் சிதைத்துவிடும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில், இக் கருத்தை தலைமை நீதிபதி தெரிவித்துள்ளாா்.

பிரிட்டன் உயா்நீதிமன்றத்தில் ‘நீதித் துறையின் சட்டபூா்வ தன்மை மற்றும் பொது நம்பிக்கையைப் பராமரித்தல்’ என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற அவா் இதுகுறித்துப் பேசியதாவது:

ஒவ்வோா் அமைப்பும் வலுவான நடைமுறைகளைக் கொண்டுள்ளபோதும், தொழில்முறையில் தவறான நடத்தை தொடா்பான பிரச்னைகளுக்கு உள்ளாகின்றன. துரதிருஷ்டவசமாக நீதித் துறைக்குள்ளும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இதுபோன்ற நடத்தைகள் பொதுமக்களின் நம்பிக்கை மீது எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு, ஒட்டுமொத்த நீதித் துறையின் நோ்மை மீதான நம்பிக்கையையும் சிதைத்துவிடும். இதுபோன்ற நடத்தைகளுக்கு எதிராக தீா்க்கமான, வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்.

அந்த வகையில், நீதித் துறையில் ஊழல், தவறான நடத்தைகள் தொடா்பான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும்போதெல்லாம் உரிய உடனடி நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது.

மேலும், நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றவுடன் அரசாங்கத்தில் மற்றொரு நியமனங்களை மேற்கொள்வது அல்லது தோ்தலில் போட்டியிடுவதற்காக நீதிபதி பதவியை ராஜிநாமா செய்வது நீதித் துறை மீதான பொதுமக்கள் நம்பிக்கையைப் பாதிக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக, நானும், சக ஊழியா்கள் சிலரும் பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவித அரசுப் பதவியையும் ஏற்க மாட்டோம் என பகிரங்கமாக உறுதியளித்துள்ளோம். நீதித் துறையின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த உறுதிப்பாட்டை எடுத்துள்ளோம்.

ஒவ்வொரு ஜனநாயகத்திலும் நீதித் துறையை அதன் சட்டபூா்வ தன்மை மற்றும் பொது நம்பிக்கை அடிப்படையில், நீதி வழங்குவதற்கான நிறுவனமாக மட்டுமின்றி, உண்மையான ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுவதற்குத் தகுதியான நிறுவனமாகவும் பாா்க்க வேண்டும் என்றாா்.

கொலீஜியம் முறையே சரியானது: உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியம் நடைமுறைக்கு மத்திய பாஜக அரசு எதிா்ப்பு தெரிவித்துவரும் சூழலில், கொலீஜியம் நியமன முறையே சரியானது என மாநாட்டில் தலைமை நீதிபதி கவாய் சுட்டிக்காட்டினாா்.

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கடந்த 1993-ஆம் ஆண்டு வரை அரசிடம் இருந்தது. அப்போது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனத்தில் மூத்த நீதிபதிகளுக்கு மரபுக்கு மாறாக இரண்டு முறை வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதுபோன்ற, அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீட்டைக் குறைத்து, நீதிபதிகள் நியமனத்தில் நீதித் துறையின் தன்னாட்சியை உறுதிப்படுத்தவதே கொலீஜியம் நடைமுறை. இந்த நடைமுறை மீது விமா்சனங்கள் இருக்கலாம்; ஆனால், எந்தவொரு தீா்வும் நீதித் துறை சுதந்திரத்தைப் பறித்துவிடக் கூடாது. நீதிபதிகள் எந்தவித புறக் கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றாா் தலைமை நீதிபதி கவாய்.

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னி... மேலும் பார்க்க

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!

ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில் பாலம் என்ற கனவு பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க

50,000 அரசு ஊழியர்களின் ரூ. 230 கோடி மோசடி! அரசு கேள்வி

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 ... மேலும் பார்க்க

கத்ரா - ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி!

கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.முன்னதாக ரயிலில் ஏறிய மோடி, அதில் அமர்ந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடி வாழ்... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்க... மேலும் பார்க்க

உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிர... மேலும் பார்க்க