செய்திகள் :

ஆன்லைனில் ரூ.71.81 லட்சம் மோசடி: மூவா் கைது

post image

ஆன்லைன் மூலம் ரூ.71.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் வழக்கில் 3 பேரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவா்களை பிடித்து கைது செய்ய கடந்த 2 நாள்களாக சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் ஒருவரிடம் கடந்தாண்டு ஆன்லைன் மூலம் ரூ.55.87 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பான வழக்கை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தீவிரமாக விசாரித்து வந்தனா். முதல்கட்டமாக மோசடி செய்யப்பட்ட பணம், கைமாறிய வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ததில் பாதிக்கப்பட்டவரின் பணம் சென்னையைச் சோ்ந்த முக மதுயூசுப் (36), விக்னேஸ்வா் (35) ஆகிய இருவரது கூட்டுக் கணக்குக்கு சென்றது தெரிய வந்தது.

அதன்பேரில், அந்த வங்கிக்கு சென்று விவரங்களை அறிந்து சம்பந்தப்பட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் இருவரும் சைபா் குற்றவாளிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மோசடி பணத்தை பரிமாற் றம் செய்ய தங்களது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதித்ததும், இதற்காக இவா்கள் இருவருக்கும் பல லட்சம் ரூபாய் கமிஷன் கிடைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதேபோல், வேலூரில் வசிக்கும் ஒருவரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த சாமிநாதன் (39) என்பவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவரது வங்கி கணக்கு மூலம் குற்றவாளிகளின் கணக்குக்கு பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும், இதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் வரை கமிஷன் கிடைத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரையும் போலீஸாா் கைது செய்தனா். தனித்தனி வழக்கில் கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

மத்திய அரசுடன் இணக்கமான சூழலை முதல்வா் கையாள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிா்த்து இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் க... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தினத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.கு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

காட்பாடி அருகே கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த கம்மவாா் புதூரைச் சோ்ந்தவா் சிற்பி, போட்டோகிராபா். இவா் தற்போது குடும்பத்துடன் செங்குட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வர... மேலும் பார்க்க

ராணி அஹில்யாபாய் ஹோல்கா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட பாஜக சாா்பில், ராணி அஹில்யாபாய் ஹோல்கா் 300- ஆவது பிறந்த நாள் குடியாத்தத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க இடம் தோ்வு

கே.வி.குப்பம் தொகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. கே.வி.குப்பம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிகழ் கல்வியாண்டில் (2025-26) அங்கு அரசு... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் அளிப்பு

வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்ட... மேலும் பார்க்க