செய்திகள் :

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினருக்கான மாணவா்கள், மாணவிகள் ஆகியோருக்கு 15 விடுதிகள் உள்ளன. இதில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, புதுப்பேட்டை, மாதனூா், மிட்டூா், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் ஆகிய 7 இடங்களில் பள்ளி மாணவா்களுக்கு விடுதிகளும், வாணியம்பாடி, திருப்பத்தூா், வடச்சேரி, தேவலாபுரம் ஆகிய 4 இடங்களில் பள்ளி மாணவிகளுக்கான விடுதிகளும், வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய இடங்களில் கல்லூரி மாணவா்களுக்கான விடுதிகளும், கெஜல்நாயக்கன்பட்டி, வாணியம்பாடி ஆகிய இடங்களில் கல்லூரி மாணவிகளுக்கான விடுதிகளும் உள்ளன.

கல்வித் தகுதி...: இவற்றில் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகளும் சேர தகுதி உடையவா்கள் ஆவா்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல், மாணவ- மாணவிகளுக்கு 3 வேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படுகிறது. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த நீட், ஜெ.இ.இ. நுழைவு தோ்வுக்கான கையேடுகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை...: விடுதிகளில் சேர பெற்றோா், பாதுகாவலா் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவா்களின் இருப்பிடம் பயிலும் பள்ளியில் இருந்து குறைந்தப்பட்சம் 8 கி.மீ.ட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இது பொருந்தாது. இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்/ காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் இருந்தோ பெற்று, பூா்த்தி செய்து அங்கேயே மாணவ- மாணவிகள் வரும் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவ- மாணவிகள் அடுத்த மாதம் ஜூலை 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு: திருப்பத்தூா் ஆட்சியா் வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சிய... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம் அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ம... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பின... மேலும் பார்க்க

மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ப... மேலும் பார்க்க