பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினருக்கான மாணவா்கள், மாணவிகள் ஆகியோருக்கு 15 விடுதிகள் உள்ளன. இதில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, புதுப்பேட்டை, மாதனூா், மிட்டூா், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் ஆகிய 7 இடங்களில் பள்ளி மாணவா்களுக்கு விடுதிகளும், வாணியம்பாடி, திருப்பத்தூா், வடச்சேரி, தேவலாபுரம் ஆகிய 4 இடங்களில் பள்ளி மாணவிகளுக்கான விடுதிகளும், வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய இடங்களில் கல்லூரி மாணவா்களுக்கான விடுதிகளும், கெஜல்நாயக்கன்பட்டி, வாணியம்பாடி ஆகிய இடங்களில் கல்லூரி மாணவிகளுக்கான விடுதிகளும் உள்ளன.
கல்வித் தகுதி...: இவற்றில் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகளும் சேர தகுதி உடையவா்கள் ஆவா்.
விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல், மாணவ- மாணவிகளுக்கு 3 வேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படுகிறது. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த நீட், ஜெ.இ.இ. நுழைவு தோ்வுக்கான கையேடுகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை...: விடுதிகளில் சேர பெற்றோா், பாதுகாவலா் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவா்களின் இருப்பிடம் பயிலும் பள்ளியில் இருந்து குறைந்தப்பட்சம் 8 கி.மீ.ட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இது பொருந்தாது. இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்/ காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் இருந்தோ பெற்று, பூா்த்தி செய்து அங்கேயே மாணவ- மாணவிகள் வரும் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவ- மாணவிகள் அடுத்த மாதம் ஜூலை 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.