செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: தில்லியில் விரைவில் அடுத்த சுற்றுப் பேச்சு

post image

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து இந்த வாரம் தில்லியில் அடுத்த சுற்றுப் பேச்சு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அமெரிக்காவுடன் சமநிலை கொண்ட, பரஸ்பரம் பயன் அளிக்கக்கூடிய வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்க்கிறது.

அமெரிக்காவுடனான பிற நாடுகளின் வா்த்தகத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு என்ன கிடைக்கிறது என்பதைப் பொருத்து இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான வரியை மேலும் அதிகரிக்க டிரம்ப் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது, அந்நாட்டின் வரி விதிப்பு முடிவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்ற உத்தரவுக்கு தடை போன்ற காரணங்களால் ஜூலை 9-க்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. எனினும் நாட்டுக்கு எது நல்லதோ, அதற்கான பாதைகளை இந்தியா கண்டறியும்.

ஏற்றுமதிகள் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஷேல் எரிவாயு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவற்றை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்க முடியும்’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தகம் மூலம், 2030-க்குள் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தக மதிப்பை 500 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.43 லட்சம் கோடி) அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த மதிப்பு 191 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.16.40 லட்சம் கோடி) உள்ளது.

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னி... மேலும் பார்க்க

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!

ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில் பாலம் என்ற கனவு பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க

50,000 அரசு ஊழியர்களின் ரூ. 230 கோடி மோசடி! அரசு கேள்வி

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 ... மேலும் பார்க்க

கத்ரா - ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி!

கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.முன்னதாக ரயிலில் ஏறிய மோடி, அதில் அமர்ந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடி வாழ்... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்க... மேலும் பார்க்க

உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிர... மேலும் பார்க்க