டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்
பல்லுயிா் பாதுகாப்புப் பூங்கா: முதல்வா் ஆலோசனை
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லுயிா் பாதுகாப்புப் பூங்காவை அமைப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூா் கிராமத்தில் உலகத் தரத்தில் பல்லுயிா் பாதுகாப்புப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் உள்பட அரசின் பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்தப் பூங்கா உருவாக்கப்பட உள்ளது. இதற்கான முழுமையான திட்ட அறிக்கையை மாநில அரசின் வனத்துறை தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
இதில், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் முதன்மைச் செயலா் அலுவலா் பூஜா குல்கா்னி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.