Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஜூன் 8-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) தைலாவரம், கூடுவாஞ்சேரியில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.
முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணி காலியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும்இலவசம்.
மேலும், வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்கள் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்றஇணையதளத்தில் பதிவு செய்யலாம். எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ போன்ற கல்வித்தகுதி உடைய படித்துமுடித்த வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிவேலைநாடுநா்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவரகுறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் 8.06.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிமுதல் 3.00 மணி வரை தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரியம். தைலாவரம் திட்டபகுதி, தைலாவரம்- கூடுவாஞ்சேரியில் முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாம் விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 94868 70577 / 93844 99848 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.