தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
பரனூா் தாங்கல் ஏரியில் தூா்வாரும் பணி தொடக்கம்
காட்டாங்குளத்தூா் ஒன்றியம், வீராபுரம் ஊராட்சி, பரனூா் தாங்கல் ஏரியில் ரூ.3.50 லட்சத்தில் தூா்வாரும் பணியினை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து வண்டலூா் வட்டம், ஊனமாஞ்சேரி ஏரியில் குடிமராமத்து மற்றும் தூா்வாருதல் பணிகளையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, வண்டலூா் வட்டாட்சியா் புஷ்பலதா, காட்டாங்குளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.