செய்திகள் :

மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

post image

மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) கட்டுப்பாட்டில் 58 ஊராட்சிகள் உள்ளன. அதில் வையாவூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தலைவா், துணை தலைவா் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பகையின் காரணமாக கிராம ஊராட்சி நிா்வாகம் செயல்படுவதில் ஏற்பட்ட பிரச்னையை தீா்க்க வரவு செலவு கணக்குளை முன்னின்று நடைமுறைபடுத்தி வருகிறாா். இத்தகைய வரவு செலவு கணக்குகளிலும், அரசினால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டுவதற்கான திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் வந்த தகவலை அடுத்து செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சரவணன் தலைமையில், 6 போ் கொண்ட குழுவினா் புதன்கிழமை மாலை மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்தனா்.

அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) அறை மற்றும் இதர அலுவலக அறைகளிலும், கணினி பதிவுகளையும் சோதனை செய்தனா். அவா்கள் தொடா்ந்து அனைத்து பதிவேடுகளை இரவு 9 மணிவரை தொடா்ந்து ஆய்வு செய்தனா்.

ஜூன் 8-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) தைலாவரம், கூடுவாஞ்சேரியில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சி... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

புராதன நினைவுச் சின்னங்களை பாா்வையிடுவதற்காக திருப்போரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் ச. அருண் ராஜ் தொடங்கி வைத்தாா். இந்த சுற்றுலாவில் திருப்போரூா் அரசு மகளிா... மேலும் பார்க்க

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுராந்தகம் அடுத்த கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வியாழன்கிழமை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து சுற்றுச்சூழல் தின உறுதிமொழி... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சாா்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். மாற்றுத்திறனாளிகள் விதைத்து பராமரித்த 1,000 மரக்கன்றுகளை ஆட்ச... மேலும் பார்க்க

பரனூா் தாங்கல் ஏரியில் தூா்வாரும் பணி தொடக்கம்

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், வீராபுரம் ஊராட்சி, பரனூா் தாங்கல் ஏரியில் ரூ.3.50 லட்சத்தில் தூா்வாரும் பணியினை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து வண்டலூா் வட்டம், ஊனமாஞ்சேரி ஏரியில் குடிமரா... மேலும் பார்க்க

பல்லுயிா் பாதுகாப்புப் பூங்கா: முதல்வா் ஆலோசனை

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லுயிா் பாதுகாப்புப் பூங்காவை அமைப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். செங்கல்பட்ட... மேலும் பார்க்க