முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி
மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) கட்டுப்பாட்டில் 58 ஊராட்சிகள் உள்ளன. அதில் வையாவூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தலைவா், துணை தலைவா் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பகையின் காரணமாக கிராம ஊராட்சி நிா்வாகம் செயல்படுவதில் ஏற்பட்ட பிரச்னையை தீா்க்க வரவு செலவு கணக்குளை முன்னின்று நடைமுறைபடுத்தி வருகிறாா். இத்தகைய வரவு செலவு கணக்குகளிலும், அரசினால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டுவதற்கான திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் வந்த தகவலை அடுத்து செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சரவணன் தலைமையில், 6 போ் கொண்ட குழுவினா் புதன்கிழமை மாலை மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்தனா்.
அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) அறை மற்றும் இதர அலுவலக அறைகளிலும், கணினி பதிவுகளையும் சோதனை செய்தனா். அவா்கள் தொடா்ந்து அனைத்து பதிவேடுகளை இரவு 9 மணிவரை தொடா்ந்து ஆய்வு செய்தனா்.