செய்திகள் :

இளைஞா் ஆணவக் கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

post image

சென்னை பள்ளிகரணையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞா் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிகரணையில் வசித்து வந்த பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த பிரவீன், மாற்று ஜாதி பெண்ணான ஷா்மிளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், அந்தப் பெண்ணின் சகோதரரால் கடந்த 2024 பிப்ரவரி மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டாா். கணவரை இழந்த ஷா்மிளா, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பிரவீனை கொலை செய்த வழக்கில், ஷா்மிளாவின் சகோதரா் தினேஷ் மற்றும் 4 பேரை பள்ளிக்கரணை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் ஜாமீனில் விடுதலை வெளிவந்துள்ளனா். இந்த வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சாட்சிகள் மிரட்டபட்டுள்ளதாகவும், குற்றப்பத்திரிகையில் சம்பவம் மறைக்கபட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பிரவீனின் தந்தை கோபி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க