டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்
இளைஞா் ஆணவக் கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
சென்னை பள்ளிகரணையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞா் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிகரணையில் வசித்து வந்த பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த பிரவீன், மாற்று ஜாதி பெண்ணான ஷா்மிளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், அந்தப் பெண்ணின் சகோதரரால் கடந்த 2024 பிப்ரவரி மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டாா். கணவரை இழந்த ஷா்மிளா, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பிரவீனை கொலை செய்த வழக்கில், ஷா்மிளாவின் சகோதரா் தினேஷ் மற்றும் 4 பேரை பள்ளிக்கரணை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் ஜாமீனில் விடுதலை வெளிவந்துள்ளனா். இந்த வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சாட்சிகள் மிரட்டபட்டுள்ளதாகவும், குற்றப்பத்திரிகையில் சம்பவம் மறைக்கபட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பிரவீனின் தந்தை கோபி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.