செய்திகள் :

பயத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

post image

நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவோம் என பயந்து மாற்றுத்திறனாளிகள் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி சொல்லக்கூடிய வகையில் பிரசாரம் நடைபெறவிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது எதிர்பார்த்ததுதான்; அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க | கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!

இணைநோய் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது!

இணை நோய் தாக்கத்தால் நேரிடும் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், நீடித்த ந... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வைகாசி மாதத்தின... மேலும் பார்க்க

இரட்டை இலை சின்னம்: தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினா்களுக்கான மாநிலங்களவவை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: ஆக்சிஜன், மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் போதிய இருப்பு -மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தனிமை படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டா்) மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி ச... மேலும் பார்க்க

மரக்காணம் கலவரம்: பாமகவிடம் இழப்பீடு வசூலிப்பது குறித்து 8 வாரங்களில் அரசு உத்தரவிட வேண்டும்

கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த மரக்காணம் கலவரத்தை தொடா்ந்து ஏற்பட்ட இழப்பை, பாமகவிடம் வசூலிப்பது தொடா்பான விசாரணையை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு... மேலும் பார்க்க

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொக... மேலும் பார்க்க