செய்திகள் :

மரக்காணம் கலவரம்: பாமகவிடம் இழப்பீடு வசூலிப்பது குறித்து 8 வாரங்களில் அரசு உத்தரவிட வேண்டும்

post image

கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த மரக்காணம் கலவரத்தை தொடா்ந்து ஏற்பட்ட இழப்பை, பாமகவிடம் வசூலிப்பது தொடா்பான விசாரணையை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாமல்லபுரத்தில், கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியா் சங்க சித்திரை முழுநிலவு திருவிழாவின்போது மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன. பாமகவினா் போராட்டம் காரணமாக, 2013 ஏப். 25-ஆம் தேதி முதல் மே 19-ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் அடைப்பால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பாமகவிடம் இருந்து வசூலிக்க தமிழக வருவாய் நிா்வாக ஆணையா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

இந்நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தில், பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனுவில், “12 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பாமகவிடமிருந்து வசூலிப்பது தொடா்பாக, தமிழக வருவாய் நிா்வாக ஆணையா் விசாரணை நடத்தி வருகிறாா். இந்த விசாரணை, தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதம் தடுப்பு சட்டத்தை பின்பற்றி நடத்தப்படவில்லை. இழப்பீட்டை தீா்மானிக்கும் முன் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

அதை பின்பற்றாமல் இழப்பீடு குறித்து முடிவு செய்யும் விசாரணையை நடத்தக் கூடாது. இழப்பீடு கோரி டாஸ்மாக் நிா்வாகம், போக்குவரத்து கழகங்கள் அளித்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். சட்ட விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தாமல் இழப்பீடு குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், வெறும் அச்சத்தின் அடிப்படையில், வருவாய் நிா்வாக ஆணையரின் விசாரணையை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் சட்ட விதிகளின்படி விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தாா்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, உயா்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை நடத்தி, 8 வாரங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: ரூ.97.95 கோடி மானியம் விடுவிப்பு

தமிழகத்தில் 37,476 அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 சதவீத மானியத் தொகை (ரூ. 97.95 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் நிகழ் கல்வியா... மேலும் பார்க்க

விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா்

சென்னையில் விமானங்கள் மீது லேசா் விளக்குகளை ஒளிரச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக... மேலும் பார்க்க

புதிய மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள ப... மேலும் பார்க்க

பள்ளி மாணவி மீது தாக்குதல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

சென்னை ராயப்பேட்டையில் பள்ளி மாணவி தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் அதிமுக நிா்வாகி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிக்கு, அதே பகுதியைச்சோ்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் பொய் பிரசாரம்! - எல்.முருகன்

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் 2027-இல் மக... மேலும் பார்க்க