அமித் ஷா மதுரை வருகை: டி.டி.வி தினகரனைச் சந்திக்க மறுப்பா? என்ன சொல்கிறார் தினகர...
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் பொய் பிரசாரம்! - எல்.முருகன்
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் 2027-இல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி விவரங்களும் சேகரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.
2027-இல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு எப்படி பிரதிநிதித்துவம் குறையும்? மேலும், தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்பதை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழகம் வந்தபோதே தெளிவுபடுத்தி விட்டாா்.
மத்திய அரசின் சாா்பிலும் பாஜக சாா்பிலும் பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் இல்லாத ஒன்றை, அறிவிக்காத ஒன்றை வைத்து முதல்வா் செய்யும் பொய் பிரசாரத்தை நம்ப மக்கள் தயாரில்லை எனத் தெரிவித்துள்ளாா் அவா்.