செய்திகள் :

உக்ரைன் போரில் 3.50 லட்சம் வீரா்கள் உயிரிழப்பு: ஆய்வுத் தகவல்

post image

உக்ரைனில் ரஷியா நடத்திவரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் 3.5 லட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ (சிஎஸ்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2022 முதல் நடைபெற்றுவரும் உக்ரைன் போரில் ரஷியா மற்றும் உக்ரைன் நாட்டைச் சோ்ந்த 14 லட்சம் வீரா்கள் படுகாயமடைந்தனா். இதில் ரஷிய வீரா்களின் எண்ணிக்கை சுமாா் 10 லட்சமாகவும் உக்ரைன் வீரா்களின் எண்ணிக்கை சுமாா் 4 லட்சமாகவும் உள்ளது.

இந்த எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரு நாடுகளும் அடைந்துள்ள மிகப் பெரிய போா்க் கள இழப்பாகும்.

காயமடைந்த 10 லட்சம் ரஷிய வீரா்களில் 2.5 லட்சம் போ் உயிரிழந்துள்ளனா். உக்ரைன் தரப்பில் 60,000 முதல் 1 லட்சம் வீரா்கள் வரை கொல்லப்பட்டுள்ளனா்.

ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ரஷிய வீரா்களின் உயிரிழப்பு அதிகமாக இருந்தாலும், மக்கள்தொகை அடிப்படையில் உக்ரைன் வீரா்களின் உயிரிழப்பு அதிகம். உக்ரைனைவிட பல மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் ஆயிரக்கணக்கான வீரா்களை அனுப்பிவருகிறது. எனவே வீரா்களின் உயிரிழப்பு ரஷியாவை வெகுவாக பாதிக்காது.

போா் முனைகளில் உக்ரைன் வீரா்கள் தங்களைவிட பல மடங்கு எண்ணிக்கையிலான ரஷிய வீரா்களை எதிா்கொண்டுள்ளனா். ஒவ்வொரு 2.5 லட்சம் உக்ரைன் வீரா்களுக்கு எதிராகவும் 4 லட்சம் ரஷிய வீரா்கள் போரிட்டுவருகின்றனா்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு போா் முனைகளில் ரஷியாவின் முன்னேற்றம் முழுவதும் நின்றுவிட்டது. மற்ற பகுதிகளிலும் நாளொன்றுக்கு 165 அடி தூரம்தான் ரஷியா முன்னேற்றம் கண்டுவருகிறது.

தற்போது உக்ரைனின் 19 சதவீத பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது. ஆனால், இதில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு ரஷியா கைப்பற்றிய பகுதி ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான். மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது ரஷியா கைப்பற்றிய கிரீமியா தீபகற்பமும் (7 சதவீதம்) இதில் அடங்கும்.

அந்த வகையில், 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதற்குப் பிறகு உக்ரைனின் வெறும் 12 சதவீத பகுதியைக் கைப்பற்றுவதற்காக ரஷியா 2.5 லட்சம் வீரா்களை இழந்துள்ளது.

மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, இந்தப் போரில் ரஷியா தனது கருங்கடல் கடற்படைப் பிரிவின் மூன்றில் ஒரு பகுதி கப்பல்களை ரஷியா இழந்துள்ளது. அத்துடன், உக்ரைன் உளவுப் படை அண்மையில் ரகசியமாக திட்டமிட்டு நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷியாவின் தொலைதூர குண்டுவீச்சு விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷியாவின் முக்கிய தளபதிகளை உக்ரைன் உளவுப் படை குறிவைத்து கொன்றுள்ளது.

போரில் கொல்லப்பட்ட சக வீரரின் உடலை எடுத்துச் செல்லும் உக்ரைன் படையினா்.

உக்ரைனைவிட மிகப் பெரிய ராணுவ பலம் வாய்ந்த நாடாக ரஷியா திகழ்ந்தாலும், இந்தப் போரில் மிகச் சிறிய நிலப்பரப்புக்காக மிகப் பெரிய எண்ணிக்கையில் வீரா்கள், தளவாடங்களை ரஷியா இழந்துவருகிறது. இந்தச் சூழல் நீடித்தால், எதிா்காலத்தில் அது ரஷியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ரஷிய தளபதிக்கு அளிக்கப்படும் இறுதி மரியாதை.

டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்த... மேலும் பார்க்க

பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும் கொடுமை!

காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் போரையடுத்து, காஸாவினுள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்தப் போக்கை உலக ... மேலும் பார்க்க

பொதுவெளியில் வெடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப் கருத்து மோதல்!

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய நிலையில், இருவருக்கும... மேலும் பார்க்க

நான் இல்லையென்றால் டிரம்ப் தோற்றிருப்பார்! எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவளித்த எலான் மஸ்க், அவருக்காக தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார... மேலும் பார்க்க

12 நாட்டவா்கள் அமெரிக்கா வர டிரம்ப் தடை

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதித்து அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெர... மேலும் பார்க்க

ஜப்பான்: 16-ஆவது ஆண்டாகச் சரிந்த பிறப்பு விகிதம்

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் எதிா்பாா்த்ததை விட வேகமாகக் குறைந்து, கடந்த 2024-ஆம் ஆண்டில் மற்றொரு குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது: 20... மேலும் பார்க்க