செய்திகள் :

சாலை உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்: முதல்வருடன் அமைச்சா் நிதின் கட்கரி ஆலோசனை

post image

தேசிய தலைநகா் தில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) மூலம் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் மறுஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தாவுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இச்சந்திப்புக்கு பிறகு முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது:

பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் தில்லியின் நெரிசலைக் குறைத்து மாசு இல்லாத நகரமாக மாற்ற மத்திய அரசு பெருமளவில் உதவுகிறது.

ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைகள் (டிபிஆா்) தயாரிக்கப்பட்டுள்ளன.

சராய் காலே கானில் இருந்து இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையம் வரையிலான சுரங்கப்பாதைக்கான சாத்தியக்கூறுகளும் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

மத்தியிலும், தில்லியிலும் அமைந்துள்ள பாஜக தலைமையிலான இரட்டை இயந்திர அரசாங்கம் தில்லி மக்களுக்கு பயனளித்து வருகிறது.

தில்லியில் ரூ.35,000 கோடி மதிப்பில் என்எச்ஏஐ

திட்டங்கள் நடந்து வருகின்றன. ரூ.64 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் முடிக்கப்பட்டிருக்கின்றன.

ஃபரீதாபாத் மற்றும் குருகிராமுடன் இணைக்கப்படும் சாலை, தில்லி-கட்ரா-அமிா்தசரஸ் நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை ,ஹரியாணா மற்றும் நொய்டாவிலிருந்து தில்லிக்குள் நுழையாமல் டேராடூனை சென்றடைவதற்கு வாகனங்களை அனுமதிக்கும்.

அதேபோன்று, தில்லி - ரோத்தக் சாலை, பஞ்சாபி பாக் முதல் நாங்லோய் வரையிலான சாலை,

ஆஸ்ரம-பதா்பூா் சாலை மற்றும் எம்.ஜி. சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளின் மேம்பாட்டையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தியுள்ளது,

இந்த சாலைகளில் வடிகால் அமைப்பு மற்றும் அணுகுச் சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கும்.

ஷிவ் மூா்த்தி முதல் நெல்சன் மண்டேலா சாலை வரை 7 கிலோமீட்டா் தூரத்துக்கு தரைக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐஎன்ஏ முதல் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் வரை மேம்பாலச் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) அதன் சாலைகளைச் சுற்றி வடிகால் அமைப்பைக் கட்டும் பணியையும் எடுத்துக்கொண்டுள்ளது.

இது பல நிறுவனங்களால் ஏற்படும் சிக்கல்களை நீக்கும். பொதுப் பணித் துறை அவற்றுக்கு உதவும்.

தில்லிக்கு ரூ.150 கோடி மதிப்புள்ள சாலை மேம்பாலம் மற்றும் சாலை கீழ்ப்பாலம் அமைக்கும் திட்டங்களுக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லிக்கு ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்காக, நான் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தாா் முதல்வா் ரேகா குப்தா.

இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் வி. கே. சக்சேனா, சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் தில்லி அமைச்சா்கள் கலந்துகொண்டனா்.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க