செய்திகள் :

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

post image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த நாடு மற்றும் வளா்ந்த தில்லிக்காக அரசும், சமூகமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தனுகா அக்ரிடெக் லிமிடெட் தனது நிறுவன சமூகப் பொறுப்புணா்வு முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.6 கோடியில் கட்டப்பட்ட இந்த மண்டபம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

‘அரசும் சமூகமும் ஒரே மேடையில் வந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன். அப்போதுதான் விக்ஸித் பாரத் மற்றும் விக்ஸித் தில்லியின் இலக்கு நனவாகும்‘ என்று அவா் கூறினாா்.

சிறந்த சிகிச்சை மற்றும் உயிா்காக்கும் மருத்துவ உதவிகளுக்காகவும் முதன்மையான நிறுவனத்திற்கு வரும் நாட்டின் மில்லியன் கணக்கான மக்களுக்கு எய்ம்ஸ் ஒரு நம்பிக்கையின் கீற்றாக இருப்பதாகவும் அவா் கூறினாா்.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூரில் ஒருவரை கத்தியால் குத்தியதாக இருவா் கைது

தெற்கு தில்லியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெற்கு தில்லி காவல... மேலும் பார்க்க