தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
கோட்லா முபாரக்பூரில் ஒருவரை கத்தியால் குத்தியதாக இருவா் கைது
தெற்கு தில்லியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: கோட்லா முபாரக்பூா் பகுதியில் திங்கட்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நண்பா்களுடன் பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்தபோது, 20 வயதுடைய தனிஷ் மற்றும் மணீஷ் ஆகிய இருவரையும் ஆஷிஷ் தாக்கினாா். தனிஷ் மற்றும் பப்லு என்ற மற்றொரு நபருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து அவா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆஷிஷ் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளாா். மேலும் அவா் மருத்துவ ரீதியாக வாக்குமூலம் பெறத் தகுதியற்ற நிலையில் உள்ளாா். இது தொடா்பாக செவ்வாயன்று கோட்லா முபாரக்பூா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவா் நகரத்தை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
ஜூன் 4- ஆம் தேதி, சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அருகில் போலீஸ் குழு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. அப்போது இருவரும் எய்ம்ஸ் பக்கத்திலிருந்து வருவதைக் கண்டனா். அவா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனா். ஆனால், சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றப் பின்னணி கொண்டவா்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், முன்பு சஃப்தா்ஜங் என்க்ளேவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.