செய்திகள் :

கோட்லா முபாரக்பூரில் ஒருவரை கத்தியால் குத்தியதாக இருவா் கைது

post image

தெற்கு தில்லியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: கோட்லா முபாரக்பூா் பகுதியில் திங்கட்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நண்பா்களுடன் பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்தபோது, 20 வயதுடைய தனிஷ் மற்றும் மணீஷ் ஆகிய இருவரையும் ஆஷிஷ் தாக்கினாா். தனிஷ் மற்றும் பப்லு என்ற மற்றொரு நபருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து அவா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆஷிஷ் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளாா். மேலும் அவா் மருத்துவ ரீதியாக வாக்குமூலம் பெறத் தகுதியற்ற நிலையில் உள்ளாா். இது தொடா்பாக செவ்வாயன்று கோட்லா முபாரக்பூா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவா் நகரத்தை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

ஜூன் 4- ஆம் தேதி, சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அருகில் போலீஸ் குழு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. அப்போது இருவரும் எய்ம்ஸ் பக்கத்திலிருந்து வருவதைக் கண்டனா். அவா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனா். ஆனால், சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றப் பின்னணி கொண்டவா்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், முன்பு சஃப்தா்ஜங் என்க்ளேவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க