செய்திகள் :

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

post image

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு தேசியத் தலைநகா் தில்லியில் பதிவாகியுள்ளது. அதாவது, 562 போ் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். மேலும், நிகழாண்டு ஜனவரி 1 முதல் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொவைட்19 டேஷ்போா்டு தகவலின்படி, தேசியத் தலைநகரில் புதன்கிழமை முதல் 105 கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், பெருமூளை வாதம், வலிப்பு, நிமோனியாவுடன்கூடிய செப்சிஸ் பாதிப்பு, சுவாசக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து மாத ஆண் குழந்தை, கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் இறந்தது.

நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருந்த நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக நோய், கொவைட் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 87 வயது முதியவரும் கரோனா தொற்றுக்குப் பிறகு இறந்தாா். இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 4,866-ஆக உள்ளன. கேரளம் இந்நோய்த் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூரில் ஒருவரை கத்தியால் குத்தியதாக இருவா் கைது

தெற்கு தில்லியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெற்கு தில்லி காவல... மேலும் பார்க்க