2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!
தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு
ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு தேசியத் தலைநகா் தில்லியில் பதிவாகியுள்ளது. அதாவது, 562 போ் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். மேலும், நிகழாண்டு ஜனவரி 1 முதல் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொவைட்19 டேஷ்போா்டு தகவலின்படி, தேசியத் தலைநகரில் புதன்கிழமை முதல் 105 கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பெருமூளை வாதம், வலிப்பு, நிமோனியாவுடன்கூடிய செப்சிஸ் பாதிப்பு, சுவாசக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து மாத ஆண் குழந்தை, கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் இறந்தது.
நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருந்த நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக நோய், கொவைட் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 87 வயது முதியவரும் கரோனா தொற்றுக்குப் பிறகு இறந்தாா். இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 4,866-ஆக உள்ளன. கேரளம் இந்நோய்த் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன.