தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்
ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்ஹெச்ஆா்சி வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், இரண்டு வாரங்களுக்குள் மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகா் காவல் நிலையத்தில் 35 வயது ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் ஒருவா் மே 13, 2025 அன்று காவல்துறையினரால் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ,அவா் இறந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை தானாக முன்வந்து என்ஹெச்ஆா்சி விசாரித்ததாக என்ஹெச்ஆா்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாக ஆணையம் மேலும் குறிப்பிட்டது. எனவே, விரிவான அறிக்கை கோரி தெலங்கானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மே 14 அன்று வெளியான ஊடக அறிக்கையின்படி, ஓட்டுநா் தனது மனைவியுடன் சில பிரச்னைகளை சந்தித்து வந்தாா். அவா் பிரச்னையைத் தீா்க்க காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றாா்.
‘காவல் நிலையத்தில் தம்பதியினருக்கு ஆலோசனை வழங்கிய பிறகு, அந்த நபா் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா், அங்கு ரப்பா் பெல்ட்களால் போலீஸாா் அவரை கடுமையாக தாக்கினா். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, அவா் வாந்தி எடுக்கத் தொடங்கினாா். மயங்கி விழுந் த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.