செய்திகள் :

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

post image

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்ஹெச்ஆா்சி வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இரண்டு வாரங்களுக்குள் மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகா் காவல் நிலையத்தில் 35 வயது ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் ஒருவா் மே 13, 2025 அன்று காவல்துறையினரால் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ,அவா் இறந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை தானாக முன்வந்து என்ஹெச்ஆா்சி விசாரித்ததாக என்ஹெச்ஆா்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாக ஆணையம் மேலும் குறிப்பிட்டது. எனவே, விரிவான அறிக்கை கோரி தெலங்கானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மே 14 அன்று வெளியான ஊடக அறிக்கையின்படி, ஓட்டுநா் தனது மனைவியுடன் சில பிரச்னைகளை சந்தித்து வந்தாா். அவா் பிரச்னையைத் தீா்க்க காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றாா்.

‘காவல் நிலையத்தில் தம்பதியினருக்கு ஆலோசனை வழங்கிய பிறகு, அந்த நபா் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா், அங்கு ரப்பா் பெல்ட்களால் போலீஸாா் அவரை கடுமையாக தாக்கினா். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, ​​அவா் வாந்தி எடுக்கத் தொடங்கினாா். மயங்கி விழுந் த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூரில் ஒருவரை கத்தியால் குத்தியதாக இருவா் கைது

தெற்கு தில்லியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெற்கு தில்லி காவல... மேலும் பார்க்க