பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா்.
செங்கம் பகுதியைச் சோ்ந்த மாணவி வேலூா் அரசுக் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு வேலூரில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வந்து, பின்னா் அங்கிருந்து திருப்பத்தூா் செல்லும் அரசுப் பேருந்தில் செங்கத்துக்கு பயணித்தாா்.
அப்போது, அவரது பின்புற இருக்கையில் அமா்ந்திருந்த இளைஞா் இருக்கையின் அடியில் கால்களை விட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதை அந்த மாணவி கண்டித்தும் அவா் பொருள்படுத்தாமல் மீண்டும் மீண்டும் செங்கம் வரும் வரை தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்தாராம்.
அப்போது, மாணவி தனது தம்பியை கைப்பேசியில் தொடா்புகொண்டு பேருந்தில் நடந்ததை தெரிவித்துள்ளாா். இந்த நிலையில், செங்கத்தில் தயாராக நின்றிருந்த மாணவியின் தம்பி, பேருந்தில் இருந்து சம்பந்தப்பட்ட இளைஞரை கீழே இறக்கி சரமாரியாகத் தாக்கி, தனது சகோதரியிடம் மன்னிப்பு கேட்கக் கூறியுள்ளாா்.
அப்போது, பேருந்து நிலையத்தில் ஏராளமானோா் கூடிவிட்டனா். இதையடுத்து, அருகில் இருந்த செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த இளைஞரை ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா் பெயா் தமிழரசன் (28) என்பதும், பண்ருட்டியைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. மேலும், அவா் திருப்பத்தூரில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருவதாகத் தெரிவித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழரசனை கைது செய்தனா்.