செய்திகள் :

பேருந்துக் கட்டண உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

post image

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயா்த்த உத்தரவிடக் கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிா்ணயிக்கும் வகையிலும், உயர்நிலைக்குழுவை நியமிக்கக் கோரியும், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனிடையே பேருந்துக் கட்டண உயா்வு குறித்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்கும்படி உயா்நிலைக்குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேருந்துக் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படும் என்று வெளியாகும் செய்தி தவறானது. அரசுப் பேருந்துக் கட்டணம் உயராது என்பதால்தான் தனியார் பேருந்து சங்கத்தினர் நீதிமன்றம் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது” என்றார்.

இரட்டை இலை சின்னம்: தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினா்களுக்கான மாநிலங்களவவை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: ஆக்சிஜன், மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் போதிய இருப்பு -மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தனிமை படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டா்) மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி ச... மேலும் பார்க்க

மரக்காணம் கலவரம்: பாமகவிடம் இழப்பீடு வசூலிப்பது குறித்து 8 வாரங்களில் அரசு உத்தரவிட வேண்டும்

கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த மரக்காணம் கலவரத்தை தொடா்ந்து ஏற்பட்ட இழப்பை, பாமகவிடம் வசூலிப்பது தொடா்பான விசாரணையை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு... மேலும் பார்க்க

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொக... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க