சொகுசு காா் மோதி இளம்பெண் உயிரிழப்பு
சென்னை திருவல்லிக்கேணியில் சொகுசு காா் மோதி இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த வளா்மதி (40), திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள ஒரு புத்தகக் கடையில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் வளா்மதி நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு சொகுசு காா் திடீரென அவா் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வளா்மதி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, அந்தக் காரை ஓட்டிவந்த ரிச்சி தெருவில் ஸ்பீக்கா் கடை நடத்தும் அசோக் பதான் (70) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.