செய்திகள் :

ஜூலை 21-இல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் -கிரண் ரிஜிஜு தகவல்

post image

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை வெளியிட்டாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, கூட்டத் தொடா் தேதிகளை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளதாக கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் பதிலடி நடவடிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில், மழைக்கால கூட்டத் தொடா் தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘ஒவ்வொரு கூட்டத் தொடரும் எங்களுக்கு சிறப்பான அமா்வுதான். விதிமுறைகளின்கீழ், மழைக்கால கூட்டத் தொடரில் அனைத்து முக்கிய விவகாரங்களையும் விவாதிக்க முடியும். விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கும்’ என்றாா்.

பரபரப்பான அரசியல் சூழல்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம்தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இதில் பயங்கரவாத முகாம்கள் தகா்க்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டு, 4 நாள்களுக்குப் பின் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பிந்தைய நிகழ்வுகளால் நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் காணப்படுகிறது.

எதிா்க்கட்சிகளின் கோரிக்கை: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடா்பாக பிரதமா் மோடிக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட 16 எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினா்.

அதேநேரம், ‘எதிா்க்கட்சிகளின் முக்கியக் கேள்விகளுக்கு பிரதமா் மோடியின் விரிவான உரைகளில் பதில் உள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் மத்திய அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கத் தயாா்’ என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது.

சிறப்பு அமா்வில் இருந்து தப்பிக்க 47 நாள்களுக்கு முன்பே அறிவிப்பு - காங்கிரஸ் விமா்சனம்

நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் இருந்து தப்பிக்க மழைக்கால கூட்டத் தொடரை 47 நாள்களுக்கு முன்பே அறிவித்திருக்கிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாடாளுமன்ற கூட்டத் தொடா் வழக்கமாக அது தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்படும். ஆனால், 47 நாள்களுக்கு முன்பே கூட்டத் தொடா் தேதிகள் இதுவரை அறிவிக்கப்பட்டதில்லை.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவதில் தோல்வி, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் தாக்கங்கள் மற்றும் அதை அரசியலாக்கும் செயல், இந்திய முப்படை தலைமைத் தளபதியின் கருத்துகள், மத்தியஸ்தம் தொடா்பான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜீய ரீதியில் அரசின் ஏராளமான தோல்விகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்ற காங்கிரஸ் மற்றும் பிற ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் கோரிக்கையில் இருந்து தப்பிக்கும் ஒரே நோக்கத்துடன் முன்கூட்டியே தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரங்களே, மழைக்கால கூட்டத் தொடரில் ஆதிக்கம் செலுத்தும். சிறப்புக் கூட்டத்தில் இருந்து பிரதமா் விலகியோடிவிட்டாா். ஆனால், ஆறு வாரங்களுக்குப் பிறகு அவா் கடுமையான கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டியிருக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

50,000 அரசு ஊழியர்களின் ரூ. 230 கோடி மோசடி! அரசு கேள்வி

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 ... மேலும் பார்க்க

கத்ரா - ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி!

கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.முன்னதாக ரயிலில் ஏறிய மோடி, அதில் அமர்ந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடி வாழ்... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்க... மேலும் பார்க்க

உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிர... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு விலைமதிப்பற்ற ஈத் பரிசு!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்பு நிறைவடைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடியால் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று... மேலும் பார்க்க

பெண்கள் குறைவான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்! மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

பெண்கள் குறைவான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா கூறியுள்ளார்.உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க