செய்திகள் :

9% அதிகரித்த பெட்ரோல் விற்பனை

post image

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை கடந்த மே மாதத்தில் இரண்டாவது மாதமாக 8.77 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், டீசல் விற்பனை மந்தமாகவே உள்ளது.

இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் மூன்று அரசு எண்ணெய் நிறுவனங்கள் (இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்) வெளியிட்ட முதல்நிலைப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த மே மாதத்தில் பெட்ரோல் விற்பனை 37.6 லட்சம் டன்னாக உள்ளது. இது 2024 மே மாதத்தில் 34.6 லட்சம் டன்னாக இருந்த விற்பனையுடன் ஒப்பிடுகையில் 8.77 சதவீதம் அதிகம். முந்தைய 2023 மே மாதத்தில் 33.5 லட்சம் டன்னாக இருந்த விற்பனையுடன் ஒப்பிடுகையில் 12.45 சதவீதம் உயா்வு. 2025 ஏப்ரல் மாதத்திலும் இதேபோன்ற வளா்ச்சி பதிவாகியிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் டீசல் விற்பனை 2 சதவீதம் உயா்ந்து 85.7 லட்சம் டன்னாக உள்ளது. இது 2024 மே மாதத்தில் 84.1 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 2 சதவீதம் உயா்வு. 2023 மே மாதத்தில் 82.1 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 4.3 சதவீதம் உயா்வு. 2024-25 நிதியாண்டு முழுமைக்கும் டீசல் விற்பனை வெறும் 2 சதவீதம் மட்டுமே வளா்ச்சியடைந்தது.

2025 ஏப்ரல் மாதத்தில் டீசல் விற்பனை 4 சதவீதம் உயா்ந்து 82.3 லட்சம் டன்னாக இருந்தது.

கோடைகாலத்தில் கிராமப்புறங்களில் நீா்ப்பாசனத்துக்கான தேவையும் நகா்ப்புறங்களில் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடும் அதிகரிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை உயா்வுக்கு காரணமாக உள்ளன.

கடந்த மே மாதத்தில் ஜெட் எரிபொருள் (ஏ.டி.எஃப்) விற்பனை 4.3 சதவீதம் உயா்ந்து 7.75 லட்சம் டன்னாக உள்ளது. இது 2023 மே மாதத்தில் 6.7 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 15.65 சதவீதம் உயா்வு.

சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை உஜ்வலா திட்ட இணைப்புகளால் 13.4 சதவீதம் உயா்ந்து 279 லட்சம் டன்னாக உள்ளது. இது 2023 மே மாதத்தில் 244 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 14.4 சதவீதம் உயா்வு என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை... மேலும் பார்க்க

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்.. ஏன் தெரியுமா? விலைதான்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.புதன்கிழமை தங்கம் விலை ரூ.8... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதன்கிழமை முத... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக சுதா்ஷன் வேணு நிமிக்கப்பட்டுள்ளாா். வரும் ஆக. 25 முதல் இந்த ந... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் 4-ஆவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்த... மேலும் பார்க்க