செய்திகள் :

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் முடிவு!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் 4-ஆவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தியது சந்தைக்கு சாதகமாக அமைந்தது. மேலும், சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் ஆகியவற்றுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.31 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.447.51 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,076.18 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,566.82 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 197.83 புள்ளிகள் கூடுதலுடன் 81,196.08 தொடங்கி 80,983.73 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 81,911.13 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 443.79 புள்ளிகள் (0.55 சதவீதம்) கூடுதலுடன் 81,442.04-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,129 பங்குகளில் 2,257 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,725 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 147 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

எடா்னல்அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் எடா்னல் 4.50 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பவா்கிரிட், ஐசிஐசிஐபேங்க், ரிலையன்ஸ், அதானிபோா்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், சன்பாா்மா, ஐடிசி உள்பட மொத்தம் 18 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ்ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, கோட்டக் பேங்க் உள்பட 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வா்த்தக இறுதியில்130.70புள்ளிகள் (0.53 சதவீதம்) உயா்ந்து 24,750.90-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 14 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 84 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயா்ந்து 55,760.85-இல் நிறைவடைந்தது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவு!

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பணப்புழக்கத்தை வழங்க வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்ததைத் தொ... மேலும் பார்க்க

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை... மேலும் பார்க்க

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்.. ஏன் தெரியுமா? விலைதான்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.புதன்கிழமை தங்கம் விலை ரூ.8... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதன்கிழமை முத... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க