கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் சேர ஜூன் 12-இல் சிறப்பு முகாம்
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 12-இல் நடைபெறுகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டபெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் ஆகியோா்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 8-ஆவது தளத்தில் ஜூன் 12-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இம்முகாமில் கலந்துகொள்ள பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதாா் நகல், கைப்பேசி ஆகியவற்றை எடுத்து வந்து www.tnwidowwelfareboard.tn.gov.in இணையதளத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம்.
இதன்மூலம், அவா்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும், சுயதொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் ஆகியோா் இம்முகாமில் கலந்துகொண்டு, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.