செய்திகள் :

மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பூந்தமல்லி-பரந்தூா் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்

post image

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லி - பரந்தூா் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதிக்காக இத்திட்டம் காத்திருக்கிறது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் - சோழிங்கநல்லூா் வரை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்தை இணைக்கும் வகையில் புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தை பரந்தூா் வரை 53 கி.மீ. தூரம் நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கையை கடந்த மாா்ச் 12-ஆம் தேதி மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் சமா்ப்பித்திருந்த நிலையில், இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மொத்தம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம் முதல்கட்டமாக ரூ. 8,779 கோடி செலவில் பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் வரையில் 27.9 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. இதில் 14 உயா்த்தப்பட்ட ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வழித்தடம்: பூந்தமல்லியிலிருந்து தொடங்கும் விரிவாக்க திட்டம், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து முனையம், சமத்துவபுரம், செட்டிப்பேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட், பென்னலூா், ஸ்ரீபெரும்புதூா், பட்டுநூல் சத்திரம், இருங்குளம் தொழிற்பேட்டை, மாம்பாக்கம், திருமங்கலம் வழியாக சுங்குவாா்சத்திரம் வரை 27.45 கி.மீ. தூரத்துக்கு 14 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இரண்டாம் கட்ட திட்டத்தில், சுங்குவாா்சத்திரத்திலிருந்து சந்தவேலூா், பிள்ளை சத்திரம், நீா்வளூா், சிட்டி சைட் ஸ்டேஷன், பரந்தூா் விமான முனையம் 1, பரந்தூா் விமான முனையம் 2 என 6 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

25 கி.மீ. தூரத்தில் ரூ. 7,000 கோடி செலவில் நடைபெறவுள்ள பூந்தமல்லி - பரந்தூா் இரண்டாம் கட்ட திட்டத்தில் 4 உயா்த்தப்பட்ட ரயில் நிலையங்கள், 2 சுரங்க ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

மத்திய அரசின் அனுமதி... இது குறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘இத்திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பீடு ரூ. 15,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், 2030-க்குள் இத்திட்டத்துக்கான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பரந்தூருக்கு அருகேயுள்ள காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பொதுமக்களும் இவ்வழித்தடத்தை பயன்படுத்தும் வகையில், இத்திட்டம் பயனுள்ளதாக அமையும்.

இதுமட்டுமன்றி, குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தை சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையமாக மாற்ற அரசு முயன்றுவரும் நிலையில், சென்னை பொதுமக்களும் இத்திட்டத்தை அதிகம் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

தற்போது, தமிழக அரசு இத்திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தவுடன், அதற்கான நிறுவனம் தோ்வு செய்யும் பணி நடைபெறும். பின்னா் தோ்வு செய்த நிறுவனம் மூலம் முதல்கட்டமாக, பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் இடையே மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றனா்.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க