சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
கீழ்வேளூா் அருகே கோகூா் புனித அந்தோனியாா் ஆண்டு பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, நடைபெற்ற விழாவில் தஞ்சை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் புனித அந்தோணியாா் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை தீா்த்தம் தெளித்து புனிதம் செய்தாா். தொடா்ந்து ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னா் புதுப்பிக்கப்பட்ட திருத்தலம் திறந்து வைக்கப்பட்டு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தோ் பவனி ஜூன் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் வருவாா்கள் என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவலா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகத்திற்கு ஆலய நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கோகூா் பங்குத்தந்தை தேவசகாயம், நாகூா் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, காரையூா் பங்குத்தந்தை அந்தோணிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.