செய்திகள் :

ஆலங்குளத்தில் விநாயகர் சிலை உடைப்பு: நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டூழியம்!

post image

ஆலங்குளத்தில் நள்ளிரவில் மர்ம நபர்களால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன் கோட்டையில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் சார்பில் ஆலங்குளத்தில் கடந்த மே 1 ஆம் தேதி புதிதாக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு 4 தினங்களே உள்ள நிலையில் விநாயகர் கோயிலில் பந்தலிட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோயில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

காலையில் பக்தர்கள் வழிபாடு செய்ய வந்த பின்னரே சிலை சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க | மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

நெல்லை, பொதிகை ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படாது!

நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நெல்லை, பொதிகை, சேரன் உள்ளிட்ட விரை... மேலும் பார்க்க

தில்லி, உ.பி., மே.வங்கத்தில் அதிகரிக்கும் கரோனா: செய்திகள் நேரலை!

தங்கம் விலைசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9,090 ஆகவும் சவரன் ரூ. 72,720 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும்... மேலும் பார்க்க

அமெரிக்காவிற்குள் அபாயகர கிருமியை கடத்திய சீனா?

கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அரிசி உள்ளிட்ட பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்கு கடத்தி சென்றதாக 2 சீன ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தக... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்: சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி துறைகளை தணிக்கை செய்ய தனியார் தணிக்கை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாமென சிஏஜி விடுத்துள்ள அழைப்பு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், அரசமைப்புச் சட்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவில் புதிய உச்சம்!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துக... மேலும் பார்க்க

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

பெய்ஜிங்: சீனாவில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் புதன்கிழமை அதிகாலை 4.43 மணியளவில் அட்சரேகைக்கு 33.73 டிகிரி வடக்க... மேலும் பார்க்க