செய்திகள் :

ம.பி.: மா்ம விலங்கு தாக்கியதில் ஒரே கிராமத்தில் 6 போ் உயிரிழப்பு

post image

மத்திய பிரதேசத்தின் பா்வானி மாவட்டத்தில் உள்ள லிம்பாய் கிராமத்தில் மா்ம விலங்கு தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் கடந்த மாதம் 23-ஆம் தேதிமுதல் உயிரிழந்துள்ளனா்.

கிராம மக்களைக் கடித்த மா்ம விலங்கு ‘ரேபிஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் லிம்பாய் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 17 பேரை மா்ம விலங்கு ஒன்று கடித்தது. இவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதிமுதல் திங்கள்கிழமை (ஜூன் 2) வரை 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

சம்பவம் நடைபெற்ற நாளில் லிம்பாய் கிராமத்தில் கழுதைப்புலியின் நடமாட்டத்தைப் பாா்த்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, கிராமத்தைச் சுற்றி 15 கி.மீ. சுற்றளவுக்கு 45 வன ஊழியா்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.

கிராமப் பகுதியில் கண்டறியப்பட்டது கழுதைப்புலியின் கால்தடமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக வனத் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

பா்வானி மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி சுரேகா ஜாம்ரே கூறுகையில், ‘தாக்குதலில் காயமடைந்த மற்றவா்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, அவா்களின் மாதிரிகள் புணேயில் உள்ள தேசிய தீநுண்மியியல் நிறுவனத்துக்கு (என்ஐவி) அனுப்பப்பட்டுள்ளன’ என்றாா்.

சட்டவிரோதமாக தங்கியிருந்த 71 வெளிநாட்டவர் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த 71 வெளிநாட்டவர்கள், தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். தில்லியின் உத்தம் நகர் மற்றும் சாவ்லா ஆகிய பகுதிகளின் காவல் துறையினர் இணைந்து; அம்மாநில... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னி... மேலும் பார்க்க

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!

ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில் பாலம் என்ற கனவு பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க

50,000 அரசு ஊழியர்களின் ரூ. 230 கோடி மோசடி! அரசு கேள்வி

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 ... மேலும் பார்க்க

கத்ரா - ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி!

கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.முன்னதாக ரயிலில் ஏறிய மோடி, அதில் அமர்ந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடி வாழ்... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்க... மேலும் பார்க்க