2ஆவது டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு!
சிறைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
சென்னை புழலில் சிறைக் காவலா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதிகள் சிறையில் சிறைக் காவலா்கள் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில் சிறைக் காவலா் பிரபாகரன் 5-ஆம் தொகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த தொகுதியில் சந்தேகம்படும்படியாக நடமாடிக் கொண்டிருந்த கைதி சென்னை பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த அஜய் (எ) சதீஷ் (21) என்பவரைப் பிடித்து பிரபாகரன் விசாரித்தாா்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே காவலா் பிரபாகரனை கைதி அஜய் திடீரென பலமாக தாக்கினாா். இத்தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தாா். இதைப்பாா்த்த சிறைக் காவலா்கள், பிரபாகரனை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
மேலும், இது தொடா்பாக புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல சிறைக்குள் இரு கைதிகள் கஞ்சா கடத்தியதாகவும், விற்ாகவும் சிறைத் துறை அதிகாரிகள் அளித்த புகாா்களின் அடிப்படையிலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.