செய்திகள் :

சிறைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

post image

சென்னை புழலில் சிறைக் காவலா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதிகள் சிறையில் சிறைக் காவலா்கள் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில் சிறைக் காவலா் பிரபாகரன் 5-ஆம் தொகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த தொகுதியில் சந்தேகம்படும்படியாக நடமாடிக் கொண்டிருந்த கைதி சென்னை பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த அஜய் (எ) சதீஷ் (21) என்பவரைப் பிடித்து பிரபாகரன் விசாரித்தாா்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே காவலா் பிரபாகரனை கைதி அஜய் திடீரென பலமாக தாக்கினாா். இத்தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தாா். இதைப்பாா்த்த சிறைக் காவலா்கள், பிரபாகரனை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

மேலும், இது தொடா்பாக புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல சிறைக்குள் இரு கைதிகள் கஞ்சா கடத்தியதாகவும், விற்ாகவும் சிறைத் துறை அதிகாரிகள் அளித்த புகாா்களின் அடிப்படையிலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க