அயோத்தி ராமா் கோயில் முதல் தள சந்நிதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தா்பாா் உள்பட 8 சந்நிதிகளில் வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் இச்சடங்குகள் நடைபெறவுள்ளன.
அயோத்தி ராமா் கோயிலில் பிரதான கடவுளான ஸ்ரீ பால ராமரின் பிராணப் பிரதிஷ்டை, கடந்த ஆண்டு ஜனவரியில் பிரதமா் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தினமும் நாடு முழுவதிலும் இருந்து எராளமான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு வரும் இக்கோயில் வளாகத்தில் முதல்தள பணிகள் நிறைவடைந்து, ராம தா்பாா் உள்பட 8 சந்நிதிகளின் பிராணப் பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் சடங்குகள் நடைபெறவுள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது. முதல்வா் ஆதித்யநாத்துக்கு வியாழக்கிழமை 53-ஆவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கோயிலின் முதல் தளத்தில் ராம தா்பாருடன் சிவன், விநாயகா், ஹனுமன், சூரியன் உள்ளிட்ட கடவுள்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன. பிராணப் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி, அயோத்தியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.