செய்திகள் :

சிதம்பரம்: மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டிய அண்ணாமலை பல்கலை. பேராசிரியர் கைது

post image

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் 27 வயதுடைய மாணவி ஒருவர், 2018-ல் முதுநிலை வேளாண்மை படித்து வந்தார்.

அப்போது அதே துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த 55 வயதுடைய ராஜா, அந்த மாணவியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அப்போது அதைத் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்த உதவிப் பேராசிரியர் ராஜா, அதைக் காட்டி மாணவியை மிரட்டி பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார்.

அண்ணாமலை பல்கலைக்கழகம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்

அந்த வீடியோவை வெளியில் விட்டுவிடுவேன் என்று ராஜா மிரட்டியதால், பயந்துபோன மாணவி வேறு வழியின்றி பேராசிரியர் ராஜா அழைக்கும் இடத்திற்கெல்லாம் சென்றிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பயந்துபோன மாணவி, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகாரளித்திருக்கிறார். அதையடுத்து அந்த புகாரின் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார் எஸ்.பி ஜெயக்குமார்.

விசாரணையில் மாணவி அளித்த புகார் உண்மை என்று தெரிய வரவே, உதவிப் பேராசிரியர் ராஜாவைக் கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி ஜெயக்குமார். அதனடிப்படையில் சிதம்பரம் சாரதாராம் நகரைச் சேர்ந்த ராஜாவை, அண்ணாமலை நகர் போலீஸார் கைது செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை வெட்டி குளத்துக்குள் தள்ளிய கும்பல்!' - நடந்தது என்ன?

புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் நண்பரை அடித்துக் கொலைசெய்த பலகாரக் கடை தொழிலாளி - நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது: 41). இவர், கரூரில் உள்ள ஒரு பலகாரக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (வயது: 35). அதேபோல், மது... மேலும் பார்க்க

`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி'- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் கடந்த ... மேலும் பார்க்க

ரயில் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் வெளியிட்ட பெண்; கைதுசெய்து எச்சரித்த ரயில்வே போலீஸ்- நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த இளம் பெண் ஷகீலா பானு(30). இவர் ரீல்ஸ் போடுவதன் மூலம் இன்ஸ்டாவில் பிரபலம். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது ஓடும்... மேலும் பார்க்க

கரூர்: 'கனடாவில் உடனே வேலை' - விவசாயியிடம் ரூ. 5.70 லட்சம் ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டம், புகளூர் நடுநானப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன்(வயது 60). இவரது மகன் மனோஜ் பிரபாகர். இவர், பி.எஸ்.சி வேளாண் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டிலிருந்து வந்... மேலும் பார்க்க

``ISI தொடர்பு; பாகிஸ்தானுக்கு உளவு..'' - ஜோதி மல்ஹோத்ராவுக்கு நெருக்கமான யூடியூபர் பஞ்சாப்பில் கைது

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீப காலமாக ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் போர்க்கப்பல்களை ... மேலும் பார்க்க