மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ் (35). இவா், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியாா் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். பிரகாஷ்ராஜ், சென்னை கோபாலபுரத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சிக்காக இங்கு வந்திருந்தாா். இதற்காக அவா், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.
பிரகாஷ்ராஜ், செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்து முடிந்த பின்னா், வள்ளுவா்கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு வந்தாா். அப்போது அந்த டீ கடையில் மின் விளக்கு அலங்காரத்துக்கு நடப்பட்டிருந்த இரும்பு கம்பியை பிடித்தபோது, கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் பிரகாஷ்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ்ராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த பிரகாஷ்ராஜுக்கு, கெளசல்யா என்ற மனைவியும், நான்கு மாத குழந்தையும் இருக்கின்றனா்.