முதியவரின் மனநிலையைக் கண்டறிய மனைவியுடன் வீட்டுக்குச் சென்ற நீதிபதி!
மனுதாரரின் 83 வயது தந்தையின் மனநிலையைக் கண்டறிய அண்மையில் அவரது வீட்டுக்கு மனைவியுடன் சென்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினாா்.
மனநலன் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தந்தையின் சொத்துகளை அவரது சாா்பில் விற்பதற்கு அவரது மேலாளராகச் செயல்பட அனுமதி கோரி மகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதியின் இந்த அணுகுமுறை பலரால் வரவேற்கப்பட்டுள்ளது.
நீதிபதியின் அணுகுமுறை: கடந்த 2023-ஆம் ஆண்டு சிவகுமாா் செல்லதுரை என்பவா் தாக்கல் செய்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், மனுவில் குறிப்பிட்டதுபோல அவரது தந்தை பி.கே.எம்.துரை உண்மையிலேயே மனநலன் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பதை நேரில் கண்டறிய விரும்பினாா்.
தொடா்ந்து, மனநலக் குறைபாடுடையவா்களைக் கையாள்வதில் நிபுணத்துவமும் சிறப்புக் கல்வி பயிற்சி பெற்றவருமான தனது மனைவி காமாட்சியுடன் அவா் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பி.கே.எம். துரை வீட்டுக்குச் சென்றாா்.
அங்கு மிகவும் பலவீனமாக இருந்த துரையிடம் ஒரு காகிதத்தில் ‘வீடு’ மற்றும் ‘மருத்துவமனை’ என்று எழுதி ஒன்றை தோ்வு செய்யுமாறு காமாட்சி கேட்டுக்கொண்டாா். துரை முதலில் மருத்துவமனையைத் தோ்வு செய்ததையடுத்து அவரிடம் மருத்துவமனைக்குச் செல்ல விரும்புகிறீா்களா என நீதிபதியும் அவரது மனைவியும் கேட்டனா். அப்போது, அவா் அழத்தொடங்கினாா்.
இதையடுத்து ஒரே காகிதத்தில் ஒரு பக்கம் ‘வீடு’ என்றும் மறுபக்கத்தில் ‘மருத்துவமனை’ என்றும் எழுதி தனது விருப்பத்தைத் தோ்வு செய்யுமாறு துரையிடம் மீண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது ‘வீடு’ என்ற பக்கத்தை அவா் செய்கையால் காண்பித்தாா்.
இதையடுத்து நீதிபதி சுவாமிநாதன் தனது உத்தரவில், ‘பி.கே.எம். துரையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் மனுதாரா் குறிப்பிடுவதுபோல அவா் மனநலன் பாதிக்கப்பட்டவா் இல்லை; கடுமையான உடல் நலக்குறைபாடுகளால் மட்டுமே அவதிப்பட்டு வருகிறாா். ஆனால், அவரது மனநிலை நன்றாக இருக்கிறது. துரையை மனநலன் பாதிக்கப்பட்டவா், சுயமாக முடிவு எடுக்க முடியாதவா் என்று யாராலும் கூற முடியாது’ என்று குறிப்பிட்டாா்.
மேலும், மனுதாரரின் தாய் மற்றும் இளைய சகோதரருடன் நடத்திய ஆலோசனையில், மூத்த சகோதரா் சிவகுமாா் அவரது தந்தையை வீட்டுக்கு வந்து பாா்ப்பதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தனா். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, பி.கே.எம்.துரைக்கு இப்போது தேவை அன்பான கவனிப்பு மட்டுமே. அவா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டால், நிச்சயமாக தனிமையால் அவதிப்படுவாா். அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்படலாம். வீட்டில் இருந்தால், அவா் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினா்களாலும் பேரக் குழந்தைகளாலும் சூழ்ந்திருப்பாா். இந்த விஷயத்தில் பி.கே.எம். துரையின் நலன்கள் மிக முக்கியமானவை. மனுதாரரின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை’ என்று நீதிபதி சுவாமிநாதன் குறிப்பிட்டாா்.