செய்திகள் :

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்தம்

post image

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ரூப் கம்பெனி-க்கு வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து உருவாக்கிய சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவா் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநா் தி.அா்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் அண்ட் ரூப் கம்பெனி-யின் பொறியியல் குழு பொது மேலாளா் சஞ்சய் பட்டாசாா்யா ஆகியோா், சென்னையிலுள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

6.484 ஏக்கா் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகக் கட்டடம், மொத்தம் 1,08,290.01 சதுர மீட்டா் பரப்பளவைக் கொண்டது. இதில் இரண்டு அடித்தள நிலைகள், ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் இருக்கும்.

அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்படும் பேருந்து முனையத்தின் பணிகளை 24 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதற்கு மேலே உள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் மற்றும் குறளகம் கட்டடப் பணிகள் 30 மாதங்களுக்குள் நிறைவடையும் என சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க