செய்திகள் :

``ISI தொடர்பு; பாகிஸ்தானுக்கு உளவு..'' - ஜோதி மல்ஹோத்ராவுக்கு நெருக்கமான யூடியூபர் பஞ்சாப்பில் கைது

post image

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீப காலமாக ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் போர்க்கப்பல்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பிய பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பஞ்சாப்பில் ஒரு யூடியூப்பர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜஸ்பிர் சிங் என்ற அந்த நபர் பஞ்சாப்பின் ரூப்நகரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நடத்தும் ஜான்மகால் வீடியோ என்ற யூடியூப் சேனலில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இது குறித்து பஞ்சாப் டிஜிபி கெளரவ் யாதவ் கூறுகையில், ''ஜஸ்பிர் சிங் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பை சேர்ந்த சாகிர் என்பவரை தொடர்பு கொண்டு இந்தியாவில் உளவு பார்த்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஏற்கெனவே பாகிஸ்தானுக்காக உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண் யூடியூப்பர் ஜோதி மல்ஹோத்ராவிற்கு மிகவும் நெருக்கமானவரான ஜஸ்பிர் சிங், பாகிஸ்தான் தூதர அதிகாரி டேனீஷ் என்பவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்பிர் சிங்கும் பாகிஸ்தானுக்கு 3 முறை சென்று வந்துள்ளார். பாகிஸ்தானுக்கு சென்றபோது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறார். அதோடு அவரது மொபைல் போனில் பல பாகிஸ்தான் நம்பர்கள் இருக்கிறது. அந்த நம்பர்களை ஆய்வு செய்து வருகிறோம். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த பாகிஸ்தான் தேசிய தினத்திலும் ஜஸ்பிர் சிங் பங்கேற்றுள்ளார்.

ஜோதி மல்ஹோத்ரா

ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டவுடன் தான் பிடிபடுவதை தவிர்க்கும் வகையில் ஜஸ்பிர் சிங் பாகிஸ்தான் தொடர்புகளை அழிக்க முயற்சி செய்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக ஆப்ரேசன் சிந்தூரின் போது ராணுவ நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரித்து பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதாக பஞ்சாப்பில் தரன் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து விசாரணை!

திருச்சி, ஸ்ரீரங்கம், புலிமண்டபம் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் நாகராஜன் (வயது: 59). இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்... மேலும் பார்க்க

ரௌடி பொய்யாகுளம் தியாகுவுக்கு மாவுகட்டு; `என்கவுன்ட்டர்' குறித்து அச்சம் தெரிவிக்கும் மனைவி

காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தவர் திருகாளி மேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி பொய்யாகுளம் தியாகு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நி... மேலும் பார்க்க

ஹரியானா: 13 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; காதலனுடன் பாஜக பெண் நிர்வாகி கைது; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பா.ஜ.க நிர்வாகியான நிஷா தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் நிஷாவுடன் வசித்து வர... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சியில் முதியவர் சுட்டுக் கொலை; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை - நடந்தது என்ன?

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவருடைய தந்தை கருப்பசாமி(60). தாய் சிவகாமி(50). கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, இரவு 9 மணி அளவில் சிவக்கும... மேலும் பார்க்க

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை வெட்டி குளத்துக்குள் தள்ளிய கும்பல்!' - நடந்தது என்ன?

புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்... மேலும் பார்க்க