செய்திகள் :

`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி'- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்

post image

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். அதே பகுதியில் இறைச்சி கடையை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். கடந்த 2022 அக்டோபரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பாபு என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் தன்னை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மாப்பிள்ளை என்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு என்னுடைய நண்பர் என்றும் என்னிடம் கூறினார். தொடர்ந்து உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது அரசு வேலை வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள், உடனே ஏற்பாடு செய்து தருகிறேன் என்று தெரிவித்தார். அதை உண்மையென நம்பிய நான், என்னுடைய பெரியப்பா மகன்கள், என்னுடைய மனைவி ஆகியோருக்கு பொதுப்பணித்துறையிலும் கிராம நிர்வாக அலுவலர் வேலையையும் வாங்கித் தரும்படி கூறினேன். அதற்கு பாபு கேட்ட பணத்தையும் கொடுத்தேன்.

மோசடி

இதையடுத்து பாபுவின் பேச்சை நம்பி எனக்கு தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி கொடுத்தேன். இந்த வகையில் ஒரு கோடியே பதிமூன்று லட்சத்து இருபதாயிரத்தை பாபுவிடம் மயிலாப்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து பல தவணைகளாக கொடுத்தேன். அப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தெரிவு குழுவில் உறுப்பினராக இருப்பதால் வேலை கிடைக்கும் என பாபு எனக்கு நம்பிக்கையளித்தார். அவரின் பேச்சை நம்பி பணத்தைக் கொடுத்தேன். பின்னர் வேலையில் சேருவதற்கான நியமன உத்தரவு நகல்களை பாபு என்னிடம் கொடுத்தார். ஆனால் அந்த உத்தரவு போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து நான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டபோது பாபு என்னை தகாத வார்த்தைகளால் பலர் முன்னிலையில் அசிங்கப்படுத்தியதோடு எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். ஏற்கெனவே தமிழ்நாடு நகர்புற வாழ்வித மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட 627 வீடுகளை ஒதுக்கீடு செய்து தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து பாபு, ரூ. 5 கோடி வரை மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது. எனவே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து தி.மு.க எம்.எல்.ஏ வேலுவிடம் விளக்கம் கேட்டோம். ``கட்சிக்காரர்களுடன் பாபு அலுவலகத்துக்கு வருவார். அவர் குறித்த தகவலைக் கேள்விப்பட்டதும் அலுவலகத்துக்கே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். இந்த மோசடிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பாபு கூறியதைப் போல நான் தமிழ்நாடு தேர்வாணையத்தில் உறுப்பினராக இல்லை. இந்த மோசடி குறித்து எனக்கு தகவல் கிடைத்ததும் பாதிக்கப்பட்டவர்களை நான்தான் கமிஷனர் அலுவலகத்துக்கு செல்லும்படி கூறினேன். அதைப் போல காவல்துறையினரிடமும் இந்த மோசடிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டேன்" என்றார்.

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து விசாரணை!

திருச்சி, ஸ்ரீரங்கம், புலிமண்டபம் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் நாகராஜன் (வயது: 59). இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்... மேலும் பார்க்க

ரௌடி பொய்யாகுளம் தியாகுவுக்கு மாவுகட்டு; `என்கவுன்ட்டர்' குறித்து அச்சம் தெரிவிக்கும் மனைவி

காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தவர் திருகாளி மேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி பொய்யாகுளம் தியாகு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நி... மேலும் பார்க்க

ஹரியானா: 13 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; காதலனுடன் பாஜக பெண் நிர்வாகி கைது; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பா.ஜ.க நிர்வாகியான நிஷா தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் நிஷாவுடன் வசித்து வர... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சியில் முதியவர் சுட்டுக் கொலை; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை - நடந்தது என்ன?

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவருடைய தந்தை கருப்பசாமி(60). தாய் சிவகாமி(50). கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, இரவு 9 மணி அளவில் சிவக்கும... மேலும் பார்க்க