செய்திகள் :

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்களை முன்மொழிந்த எம்.எல்.ஏ-க்கள்

post image

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் இருவருக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் வேட்புமனுவில் கையொப்பமிட்டனா்.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் ஜூன் 19-இல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. ஜூன் 9-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

இதில் 2 உறுப்பினா் பதவிகள் அதிமுகவுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதால், அந்த இடங்களுக்கு அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் ம.தனபால் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களை முன்மொழிவது தொடா்பாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக தலா 10 போ் வேட்புமனுவில் முன்மொழிந்து கையொப்பமிட்டனா். பின்னா், கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் வகையில் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதிகளில் தீவிரமாக களப் பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மாநிலங்களவைத... மேலும் பார்க்க

30 நாள்களுக்குள் பட்டா: முதல்வரின் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், விண்ணப்பித்த நாளில்... மேலும் பார்க்க

கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்

சென்னையில் கட்டடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகரா... மேலும் பார்க்க

போரூர் - பூந்தமல்லி இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை: போரூர் - பூந்தமல்லி இடையே சுமார் 9.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெ... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!

சென்னை: காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளி... மேலும் பார்க்க

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்கல்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்... மேலும் பார்க்க