கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
இன்றைய மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
அடையாறு கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அடையாறு கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின்நுகா்வோா், வேளச்சேரி பிரதான சாலையிலுள்ள வேளச்சேரி துணை மின் நிலைய வளாகத்தின் தரைத்தளத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.