செய்திகள் :

ரயில் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் வெளியிட்ட பெண்; கைதுசெய்து எச்சரித்த ரயில்வே போலீஸ்- நடந்தது என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த இளம் பெண் ஷகீலா பானு(30). இவர் ரீல்ஸ் போடுவதன் மூலம் இன்ஸ்டாவில் பிரபலம். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று நடனம் ஆடியபடியும், தொங்கியபடியும் வீடியோ எடுத்து அதை பாடலுடன் ரிலீஸ் ஆக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். ஓடும் ரயில் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் நின்றபடி நடனமாடிய ஷகீலா பானுவுக்கு அவரது இன்ஸ்டா பதிவிலேயே பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அவரது வீடியோவை பலரும் பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர். இதை அடுத்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஷகீலா பானுவின் வீட்டிற்கு சென்று அவரை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர. ரயிவே பாதுகாப்புபடை நிலையத்தில் ஆஜரான ஷகீலா பானுவிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் மீது ஆபத்தான முறையில் ரயில் படிக்கட்டுகளில் நின்று நடனமாடி வீடியோ எடுத்ததற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை எச்சரித்து ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர்.

மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ஷகீலா பானு

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஷகீலா பானு வெளியிட்ட வீடியோவில், "நான் ரயிலில் போகும்போது ஒரு வீடியோ விளையாட்டுக்காக போட்டிருந்தேன். அந்த வீடியோ இவ்வளவு சீரியஸாகும் என நான் நினைக்கவில்லை. பொதுவாக நான் ரிலீஸ் செய்வேன். இந்த ரிலீஸ் போட்டதால் என் முகத்தை வெளியில் காட்ட முடியாத அளவுக்கு ஆகிவிட்டது. இது பற்றி அனைவரும் என்னிடம் கேள்விகேட்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. நான் செய்தது தவறுதான், விளையாட்டுத்தனமாக செய்துவிட்டேன். இப்போது அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டேன்.

ஷகிலா பானு வெளியிட்ட ரீல்ஸ்

என்னால் அனைவரும் கெட்டுப்போவார்கள் என செய்தி வெளியானதை பார்க்கும்போது கஷ்டமாகிவிட்டது. ரயிலில் நான் செய்த தவறால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். தவறி கீழே விழுந்து இறந்திருந்தாலோ, கை,கால் உடைந்திருந்தாலோ எனது நிலை என்னவாகியிருக்கும் என்பதை இப்போது நினைத்து பார்க்கிறேன். ரயிலில் செல்லும்போது யாரும் படிக்கட்டில் நின்று வீடியோ போடாதீர்கள்" எனக் கூறியிருந்தார்.

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து விசாரணை!

திருச்சி, ஸ்ரீரங்கம், புலிமண்டபம் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் நாகராஜன் (வயது: 59). இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்... மேலும் பார்க்க

ரௌடி பொய்யாகுளம் தியாகுவுக்கு மாவுகட்டு; `என்கவுன்ட்டர்' குறித்து அச்சம் தெரிவிக்கும் மனைவி

காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தவர் திருகாளி மேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி பொய்யாகுளம் தியாகு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நி... மேலும் பார்க்க

ஹரியானா: 13 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; காதலனுடன் பாஜக பெண் நிர்வாகி கைது; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பா.ஜ.க நிர்வாகியான நிஷா தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் நிஷாவுடன் வசித்து வர... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சியில் முதியவர் சுட்டுக் கொலை; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை - நடந்தது என்ன?

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவருடைய தந்தை கருப்பசாமி(60). தாய் சிவகாமி(50). கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, இரவு 9 மணி அளவில் சிவக்கும... மேலும் பார்க்க

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை வெட்டி குளத்துக்குள் தள்ளிய கும்பல்!' - நடந்தது என்ன?

புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்... மேலும் பார்க்க