மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
ஏழைக் கைதிகள் ஜாமீனில் வருவதற்கு மத்திய நிதியைப் பயன்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
குடும்ப ஏழ்மை நிலை காரணமாக ஜாமீன் பெற இயலாத அல்லது அபராதத் தொகையை செலுத்தி சிறையிலிருந்து விடுதலை பெற இயலாத ஏழைக் கைதிகளுக்கு மத்திய அரசின் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜாமீன் பெற அல்லது அபராதத் தொகையை செலுத்த இயலாத ஏழைக் கைதிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ‘ஏழைக் கைதிகளுக்கான உதவித் திட்டம்’ என்ற திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது.
இத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை ஒருசில மாநிலங்கள் மட்டுமே முறையாகப் பயன்படுத்தியுள்ளன. ஆனால், பல மாநிலங்கள் தொடா்ச்சியான அறிவுறுத்தல்களுக்குப் பிறகும் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதியான கைதிகளை அடையாளம் காணவில்லை என்பதோடு, இத் திட்டத்தின் கீழான எந்தவித பலன்களையும் கைதிகளுக்கு வழங்காமல் இருந்து வருகின்றன.
இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
அதன்படி, இத் திட்டத்தை திறம்படச் செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒன்றை அமைப்பதோடு, மாநில தலைநகரில் மேற்பாா்வைக் குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். இந்தக் குழுக்களே, தகுதியுள்ள கைதிகளுக்கு இத் திட்டத்தின் கீழ் நிதியுதவிகளை அளிக்கும்.
இத் திட்டம், ஏழைக் கைதிகள் எதிா்கொண்டுவரும் பிரச்னைகளுக்கு தீா்வளிக்கும் என்பதோடு, சிறைகளில் அதிகரித்து வரும் கைதிகள் நெரிசலைக் குறைக்கவும் உதவும்.
எனவே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், உரிய வழிகாட்டுதல்களின்படியும், அதிகாரமளிக்கப்பட்ட மாவட்ட குழுக்களுடன் தொடா்ச்சியான ஆலோசனைக் கூட்டங்களை மேற்கொண்டும் தகுதியுள்ள கைதிகளை அடையாளம் கண்டு இத் திட்டத்தின் கீழ் அவா்கள் பலன் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.