செய்திகள் :

திருமணம் மீறிய உறவு; மனைவியின் நண்பரை அடித்துக் கொலைசெய்த பலகாரக் கடை தொழிலாளி - நடந்தது என்ன?

post image

கரூர் மாவட்டம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது: 41). இவர், கரூரில் உள்ள ஒரு பலகாரக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (வயது: 35). அதேபோல், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது: 35). இவர், ரமேஷ் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தார். பக்கத்து வீடு என்பதால் சிவக்குமாருக்கும், அம்சாவுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. அதன்பின்னர், அந்த பழக்கம் நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியது. இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து ரமேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது வீட்டில் மனைவி அம்சாவுடன், சிவக்குமார் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து ரமேஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை தட்டிக் கேட்டபோது, சிவக்குமாருக்கும், ரமேஸூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அது வாக்குவாதமாகியது. இதில், ஆத்திரமடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து சிவக்குமாரின் தலை மற்றும் பல இடங்களில் தாக்கியுள்ளார்.

karur

இதில், பலத்த காயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து, ரமேஸை கைது செய்தனர். மனைவியோடு திருமணம் மீறிய உறவில் இருந்தவரை இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து விசாரணை!

திருச்சி, ஸ்ரீரங்கம், புலிமண்டபம் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் நாகராஜன் (வயது: 59). இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்... மேலும் பார்க்க

ரௌடி பொய்யாகுளம் தியாகுவுக்கு மாவுகட்டு; `என்கவுன்ட்டர்' குறித்து அச்சம் தெரிவிக்கும் மனைவி

காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தவர் திருகாளி மேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி பொய்யாகுளம் தியாகு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நி... மேலும் பார்க்க

ஹரியானா: 13 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; காதலனுடன் பாஜக பெண் நிர்வாகி கைது; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பா.ஜ.க நிர்வாகியான நிஷா தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் நிஷாவுடன் வசித்து வர... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சியில் முதியவர் சுட்டுக் கொலை; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை - நடந்தது என்ன?

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவருடைய தந்தை கருப்பசாமி(60). தாய் சிவகாமி(50). கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, இரவு 9 மணி அளவில் சிவக்கும... மேலும் பார்க்க