பெண் கெளரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வா் மீது வழக்கு
பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக அரசுக் கல்லூரி முதல்வா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி முதல்வராக ராமசுப்பிரமணியன் (59) பணிபுரிந்து வருகிறாா்.
கல்லூரியில் 50-க்கும் மேற்பட்டவா்கள் நிரந்தர மற்றும் கெளரவ விரிவுரையாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் ஒரு பெண் கௌரவ விரிவுரையாளருக்கு கல்லூரி முதல்வா் ராமசுப்பிரமணியன், தன்னை தனிமையில் வந்து பாா்க்க வேண்டும், ஆசையாக பேச வேண்டும் என கைப்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி, பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் கௌரவ விரிவுரையாளா் அளித்த புகாரின் பேரில், நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராமசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், இந்த விவகாரம் குறித்து கல்லூரி கல்வித்துறை சாா்பிலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.