செய்திகள் :

Maxwell: ``அணியை ஏமாற்றுவதுபோல் உணர்ந்தேன்'' - ODI போட்டியிலிருந்து விடைபெற்றார் உலகக் கோப்பை நாயகன்

post image

சமகால கிரிக்கெட்டில் ஓயிட் பால் ஃபார்மெட்டில் எந்த நேரத்திலும் வெற்றியைத் தன்வசப்படுத்தக்கூடிய ஒரு அசாத்திய வீரர் ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல்.

2023 ஒருநாள் உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தானுடன் லீக் போட்டியில் வெற்றிபெற்றால்தான் அரையிறுத்திருக்கு முன்னேற முடியும் என்ற போட்டியில், 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இனி வெற்றிபெற 99 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்ற நிலைக்குச் சென்றது ஆஸ்திரேலியா.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

அந்த நேரத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால் வலியல் துடித்துக்கொண்டிருந்த மேக்ஸ்வெல், 1 சதவிகித நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இரட்டை சதமடித்து போட்டியையும் வென்றுகொடுத்து ஆஸ்திரேலியாவை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றினார்.

அதன்பிறகு, இறுதிப்போட்டியில் இந்தியாவை பேட் கம்மின்ஸ் சைலன்ட்டாக்கிய சம்பவமெல்லாம் தனி வரலாறு. ஆனால், அந்த வரலாறு நிகழ முக்கிய காரணம் ஆப்கானிஸ்தானுக்கெதிரான போட்டியில் மேக்ஸ்வெல் போட்ட விதைதான்.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

அந்த ஒரு இன்னிங்ஸ் போதும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், குறிப்பாக ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் மேக்ஸ்வெல்லின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

இப்படியான சாதனைக்குச் சொந்தக்காரரான மேக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.

தி ஃபைனல் வேர்ட் பாட்காஸ்ட் (The Final Word Podcast) நேர்காணலில் இன்று (ஜூன் 2) பேசிய மேக்ஸ்வெல், "ஆரம்ப காலத்தில், எனக்கான நேரத்துக்கு முன்பாகவே அணியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

எதிர்பாராத விதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்காக ஓரிரு போட்டிகளில் விளையாடினாலே எனக்குப் பெருமை. அது நடக்கும் என்று நான் நினைத்தேன்.

பிறகு, அணியிலிருந்து நான் நீக்கப்பட்டேன், மீண்டும் சேர்க்கப்பட்டேன். சில உலகக் கோப்பைகளில் விளையாடினேன், சிறந்த அணிகளில் ஒரு பகுதியாக இருந்தேன்.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

இப்போது, சூழ்நிலைகளுக்கு உடல் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்க்கும்போது, அணியை நான் ஏமாற்றுவது போல் உணர்ந்தேன்.

எனவே, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற முடிவெடுத்திருக்கிறேன்.

ஜார்ஜ் பெய்லியிடம் (ஆஸி கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர்) உரையாடினேன். 2027 உலகக் கோப்பை குறித்துப் பேசினோம்.

அப்போது அவரிடம், "நான் அதுவரை தொடர்வேன் என்று நினைக்கவில்லை. என்னுடைய இடத்தில் வேறு வீரர்களை ஆட வைத்து, அந்த இடத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளத் திட்டமிட வேண்டிய நேரம் இது. அதைத் தக்கவைத்துக்கொள்ள அவர்களுக்கு போதுமான வழி கிடைக்கும்" என்று கூறினேன்.

விளையாடுவதற்கு நல்ல நிலையில் நான் இருக்கிறேன் என்றால் என்னுடைய இடத்தை நான் கொடுக்கப் போவதில்லை என்று எப்போதும் நான் கூறுவேன்.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

ஓரிரு தொடர்களுக்கு மட்டும் இருந்துகொண்டு, சுயநல காரணங்களுக்காக விளையாட விரும்பவில்லை.

அவர்கள் (ஆஸ்திரேலியா) சரியான தெளிவான பாதையில் நகர்கிறார்கள். அந்தத் திட்டமிடல் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறினார்.

 ஜார்ஜ் பெய்லி
ஜார்ஜ் பெய்லி

மேக்ஸ்வெல்லின் ஓய்வு குறித்து பேசிய ஜார்ஜ் பெய்லி, "ஒருநாள் கிரிக்கெட்டின் துடிப்பான வீரர்களில் ஒருவராக மேக்ஸ்வெல் அறிப்படுவார்.

இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதற்காக அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் தனித்து நிற்கின்றன.

டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு அவர் இன்னும் நிறைய பங்காற்ற வேண்டும்.

எல்லாம் சரியாக நடக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உலகக் கோப்பை வருவதால், அணியில் அடுத்த 12 மாதங்கள் அவர் முக்கிய பங்கு வகிப்பார்." என்று தெரிவித்தார்.

RCB: 'கோப்பையை வென்றுகொடுத்த 3 ஓவர்கள்' - என்னென்ன தெரியுமா?

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அசத்தியிருக்கிறது பெங்களூரு அணி. ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஆர்சிபி அணிக்கும் கோலிக்கும் 18 ஆண்டுகால ஏக்கம். அந்த ... மேலும் பார்க்க

RCB : 'ஈ சாலா கப் நமது ரசிகர்களே...' - ரஜத் பட்டிதர் உற்சாகப் பேச்சு

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. Rajat Patidar - RCB vs P... மேலும் பார்க்க

Shreyas Iyer : 'நாங்க இன்னும் ஓயல; அடுத்த வருஷம் கப் ஜெயிப்போம்!' - ஸ்ரேயஸ் ஐயர் உறுதி

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது.Shreyas Iyer - RCB vs PBK... மேலும் பார்க்க

RCB : '10 வருசத்துல 4 ஐ.பி.எல் கப் ஜெயிச்சிட்டேன்' - ஆட்டநாயகன் க்ரூணால் பாண்ட்யா

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. ஆட்டநாயகன் விருதை வென்ற ... மேலும் பார்க்க

RCB : "கிரீடம் உங்களுக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறது கோலி" - ஸ்டாலின் வாழ்த்து

2025-ம் ஆண்டின் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது பெங்களூரு அணி. 18வருட கனவை நிறைவேற்றியிருக்கிறது பெங்களூரு அணி. வெற்றி பெற்ற பெங்களூரு அ... மேலும் பார்க்க

RCB : 'இந்த வெற்றிக்காக 18 ஆண்டுகள் காத்திருந்தனர்' - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. RCB vs PBKSதினேஷ் கார்த்... மேலும் பார்க்க