செய்திகள் :

RCB : "கிரீடம் உங்களுக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறது கோலி" - ஸ்டாலின் வாழ்த்து

post image

2025-ம் ஆண்டின் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது பெங்களூரு அணி. 18வருட கனவை நிறைவேற்றியிருக்கிறது பெங்களூரு அணி. வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், " அடுக்கடுக்கான சப்ரைஸ்களை வைத்து இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனை த்ரில்லாக முடித்து வைத்திருக்கிறீர்கள். பெங்களூரு அணியினர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். விராட் கோலி இந்த கனவை நீங்கள் பல வருடங்களாக சுமந்திருக்கிறீர்கள்.

இன்றைய இரவு அந்த கிரீடம் உங்களுக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறது. அடுத்த ஆண்டு சென்னை அணியின் வலுவான கம்பேகை எதிர்பார்க்கிறேன்." எனப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின், " பெங்களூரு அணி முதல் IPL பட்டத்தைப் பெற்றதற்கான வாழ்த்துகள். 18வது சீசனில் 18வது ஜெர்சி எண் கோப்பையை உயர்த்துவது சரியானது. நன்றாக விளையாடினார்கள்! பஞ்சாப் அணி நன்றாக போராடிய பருவத்திற்கு வாழ்த்துகள்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க

"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!

RCB அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, பெங்களூருவில் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பங்கெடுக்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதனால் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார... மேலும் பார்க்க

RCB: "மாநிலத்துக்காக விளையாடாத வீரர்களைப் பாராட்ட அரசுக்கு என்ன கடமை?" - நீதிமன்றத்தில் காரசார வாதம்

பெங்களுருவில் நேற்று (ஜூன் 4) ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத... மேலும் பார்க்க

IPL 2025: "ஸ்ரேயஸ் தான் குற்றவாளி; அவர்தான்..." - யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சொல்வது என்ன?

2025 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை 'குற்றவாளி' என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விமர்சித்திருக்கிறார். 2025 ஐ.பி.... மேலும் பார்க்க

IPL: நெரிசல் சோகத்துக்கு முன்... RCB அணியை வரவேற்க கூடிய ரசிகர் வெள்ளம்! Photo Album

பெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில்... மேலும் பார்க்க

RCB Event Stampede: "மனதார வருந்துகிறோம்" - கூட்டாக இழப்பீடு அறிவித்த ஆர்.சி.பி, KSCA!

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.முறையான த... மேலும் பார்க்க