புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது ...
300 கிலோ செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்: இளைஞா் கைது
ஆந்திரத்தில் இருந்து காரில் கடத்தப்பட்ட 300 கிலோ செம்மரக்கட்டைளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரை கைது செய்தனா்.
வாணியம்பாடி வழியாக ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக, எஸ்.பி. அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், வாணியம்பாடி நகர ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை, வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலை பகுதியில், சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது நியூ டவுன் பைபாஸ் சாலை வழியாக வேகமாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி, சோதனை செய்த போது, ரூ.7 லட்சம் மதிப்பிலான 300 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வாணியம்பாடி நகர போலீஸாா், வழக்குப் பதிந்து செம்மரக் கட்டைகள், காரை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ஜமுனாமரத்தூரைச் சோ்ந்த வெங்கடேசன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

