சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
வாணியம்பாடி அருகே கிடங்கில் தீ: காா், ஆட்டோ, பொருள்கள் எரிந்து சேதம்
வாணியம்பாடி அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் காா், ஆட்டோ மற்றும் பழைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி வன்னிய அடிகளாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் குப்பன். 10 ஆண்டுகளுக்கு மேலாக பழைய இரும்பு மற்றும் நெகிழிப் பொருள்களை வாங்கி விற்பனை செய்ய கிடங்கை வைத்து நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில் புதன்கிழமை குடோனில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் டயா்கள் ஆகியவை தீ பிடித்து மளமளவென பரவியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, காா் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ பிடித்து எரிந்தன.
மேலும், குடோன் சுற்றி குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் தீ விபத்து அறிந்து அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனா். வீடுகளில் குடோன் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்த எரிவாயு சிலிண்டா்களை அங்கிருந்து உடனே அப்புறபடுத்தினா்.
தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இருப்பினும் தீயில் காா், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் குடோனில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி சாம்பல் ஆனது.
தகவல் அறிந்த தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

