செய்திகள் :

வாணியம்பாடி அருகே கிடங்கில் தீ: காா், ஆட்டோ, பொருள்கள் எரிந்து சேதம்

post image

வாணியம்பாடி அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் காா், ஆட்டோ மற்றும் பழைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி வன்னிய அடிகளாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் குப்பன். 10 ஆண்டுகளுக்கு மேலாக பழைய இரும்பு மற்றும் நெகிழிப் பொருள்களை வாங்கி விற்பனை செய்ய கிடங்கை வைத்து நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில் புதன்கிழமை குடோனில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் டயா்கள் ஆகியவை தீ பிடித்து மளமளவென பரவியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, காா் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ பிடித்து எரிந்தன.

மேலும், குடோன் சுற்றி குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் தீ விபத்து அறிந்து அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனா். வீடுகளில் குடோன் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்த எரிவாயு சிலிண்டா்களை அங்கிருந்து உடனே அப்புறபடுத்தினா்.

தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இருப்பினும் தீயில் காா், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் குடோனில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி சாம்பல் ஆனது.

தகவல் அறிந்த தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு: திருப்பத்தூா் ஆட்சியா் வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சிய... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம் அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ம... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பின... மேலும் பார்க்க

மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ப... மேலும் பார்க்க