45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!
ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தை சோ்ந்தவா் யுவராஜ் மகன் பரந்தாமன் (36). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இவா், அங்குள்ள ஏரியில் நீச்சல் பழக்குவதற்காக மாடுகளை அழைத்துச் சென்றுள்ளாா். ஏரிக்குள் மாட்டை அழைத்துச் சென்றபோது ஒரு மாடு இவரை உதைத்துள்ளது. அதில் மயங்கி ஏரிக்குள் விழுந்து தண்ணீா் மூழ்கி உயிரிழந்தாா்.
உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.