செய்திகள் :

Shreyas Iyer : 'நாங்க இன்னும் ஓயல; அடுத்த வருஷம் கப் ஜெயிப்போம்!' - ஸ்ரேயஸ் ஐயர் உறுதி

post image

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது.

ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது.

Shreyas Iyer - RCB vs PBKS
Shreyas Iyer - RCB vs PBKS

ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், " ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ஆனால், நாங்கள் இவ்வளவு தூரம் வந்த விதத்தையும் எங்கள் வீரர்கள் ஆடிய விதத்தையும் எண்ணி பெருமைகொள்கிறேன்.

மும்பையுடன் ஆடிய விதத்தை வைத்து 200 ரன்கள்தான் இங்கே வெற்றி பெறுவதற்கான ஸ்கோர் என நினைத்தேன். அவர்கள் 190 ரன்களைத்தான் அடித்திருந்தார்கள்.

ஆனாலும் அவர்களின் பௌலிங் சிறப்பாக அமைந்துவிட்டது. அணியின் ஒவ்வொரு வீரரை நினைத்தும் பெருமைக் கொள்கிறோம். குறிப்பாக எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.

பலருக்கும் இதுதான் முதல் சீசனாக இருந்தது. அவர்கள் பயமே அறியாமல் ஆடியிருந்தார்கள். நிறைய வீரர்கள் சரியான சமயத்தில் தாமாக முன்வந்து போட்டியை வெல்ல பங்களித்திருந்தார்கள்.

Shreyas Iyer - RCB vs PBKS
Shreyas Iyer - RCB vs PBKS

அதை பாசிட்டிவ்வாக நினைக்கிறேன். இளம் வீரர்களை சுற்றி அவர்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களைத் தீட்டி அடுத்த சீசனில் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும். பயிற்சியாளர் குழுவுக்கும் நிர்வாகத்துக்கும் உரிமையாளர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

எங்களின் வேலை இன்னுமே பாதிதான் முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு மீண்டும் வந்து கோப்பையை வெல்ல வேண்டும்." என நம்பிக்கையுடன் பேசினார்.

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க

"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!

RCB அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, பெங்களூருவில் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பங்கெடுக்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதனால் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார... மேலும் பார்க்க

RCB: "மாநிலத்துக்காக விளையாடாத வீரர்களைப் பாராட்ட அரசுக்கு என்ன கடமை?" - நீதிமன்றத்தில் காரசார வாதம்

பெங்களுருவில் நேற்று (ஜூன் 4) ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத... மேலும் பார்க்க

IPL 2025: "ஸ்ரேயஸ் தான் குற்றவாளி; அவர்தான்..." - யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சொல்வது என்ன?

2025 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை 'குற்றவாளி' என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விமர்சித்திருக்கிறார். 2025 ஐ.பி.... மேலும் பார்க்க

IPL: நெரிசல் சோகத்துக்கு முன்... RCB அணியை வரவேற்க கூடிய ரசிகர் வெள்ளம்! Photo Album

பெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில் உற்சாக வரவேற்புபெங்களூரில்... மேலும் பார்க்க

RCB Event Stampede: "மனதார வருந்துகிறோம்" - கூட்டாக இழப்பீடு அறிவித்த ஆர்.சி.பி, KSCA!

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.முறையான த... மேலும் பார்க்க